உள்நாடு

புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதிக்கு இலங்கையில் நேர்ந்த சோகம்

புகையிரதத்தில் தொங்கிய நிலையில் நேற்று (07) பிற்பகல் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

நண்பி கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

புகையிரதில் பயணம் செய்து கொண்டிருந்த போது மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.

புதரில் விழுந்ததால் சீன யுவதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

பலஸ்தீன் மக்களுக்கு எதிரான பயங்கரவாத போரை கண்டித்து மூதூரில் போராட்டம்!