உள்நாடு

பிள்ளையானுக்கு கன்னி அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி

(UTV | மட்டக்களப்பு) – பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறும் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென அவரது கட்சியினர் இன்று, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், பிள்ளையான் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதியளித்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதான பிள்ளையான், கடந்த 4 வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகின் முக்கிய சுற்றுலாத்தலமாக மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன் – ஜனாதிபதி ரணில்

editor

கண்டி நோக்கி பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்

editor

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!