சூடான செய்திகள் 1

பிலியந்தலையில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவித்தர பிரதேசத்தில் இன்று காலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, வத்தப்பார, மாவித்தர பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பிலியந்தலை பெலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் பெண்கள் 9 அம்சக் கோரிக்கை முன்வைப்பு

இன்று மீண்டும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடுகிறது

கிராமங்களில் உள்ள கலாசாரத்தை சீரழிப்பதற்கே கம்பெரலிய திட்டம்-கோட்டாவின் அதிரடி கருத்து