அரசியல்உள்நாடு

பிரிவினைவாத அரசியல் இனிமேலும் எடுபடாது – ஜனாதிபதி அநுர

பாராளுமன்ற தேர்தல் இலங்கையில் பிரிவினைவாத அரசியலிற்கு முடிவுகண்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வடக்கை தெற்கிற்கு எதிராகவும்தெற்கை வடக்கிற்கு எதிராகவும் நிலைநிறுத்தும் அரசியலால் நீண்டகாலமாக வரையறுக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தேர்தல் பிரிவினைவாத அரசியல் பிளவுபடுத்தும் அரசியல் இனி எடுபடாது என்பதை இந்த தேர்தல் காண்பித்துள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Related posts

பெரும்பாலும் மின் வெட்டு இன்று இருக்காது [UPDATE]

முரணான தகவல்களால் ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகம் –  சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறார் ரிஷாட்

கல்வியாண்டு 2022 இற்கான பரீட்சை தினங்கள்