அரசியல்உள்நாடு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – ம.வி.மு செயலாளர் சந்திப்பு

நேற்று (21) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அலுவல்களுக்கான முதலாவது செயலாளர் டொம் சொப்பர் அவர்களும், ஆலோசகர் இன்சாப் பாகீர் மாக்கர் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் சர்வதேச பிரிவுக் குழுவின் உறுப்பினர், சட்டத்தரணி மது கல்பனா தோழரும் கலந்துகொண்டிருந்தார்.

Related posts

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் கல்வியமைச்சினால் நியமனம்

துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஆடைகள் வழங்கி உதவி!