உள்நாடு

பிரதமர், பதவியை இராஜினாமா செய்ய தயாராம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும் அவர் எதிர்வரும் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிற்கும் (SLPP) அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சைகள் குழுவிற்கும் இடையில் நேற்று(02) காலை கொள்கை உடன்பாடு எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 281 பேர் நோயில் இருந்து மீண்டனர்

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

டெங்கு ஒழிப்பு உதவியாளர்களது ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு