உள்நாடுசூடான செய்திகள் 1

‘பிம்ஸ்டெக்’ மாநாடு இலங்கையில்

(UTV|கொழும்பு) – வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் எம்.சஹிதுல் இஸ்லாம்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் நேற்று(04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 2018 – 2020 ஆம் ஆண்டுக்கான பிம்ஸ்டெக்கின் தலைமையை இலங்கை பெற்றுள்ளதுடன், இந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளது.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளை கொண்ட பிராந்திய கூட்டணியாகும் .

தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

Related posts

நாடு கடத்தப்பட்ட மில்ஹான் வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிளுடன் தொடர்புபட்ட முக்கிய நபர்

அரசாங்கப் பாடசாலைகள்’ மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம் – தலதா அத்துகோரள

editor