பிணையில் விடுவிக்கப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்ய இயலாமையால் இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய அரசாங்கத்தின் போது, சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உர கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.