உலகம்

பாலஸ்தீனுக்கு ஆதரவான போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் – பிரித்தானிய பிரதமர்

பிரித்தானியாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று (07) நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வலியுறுத்தியுள்ளார்.

மன்செஸ்டர் தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யூத சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளான இன்று லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டு அணிவகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதேநேரத்தில் மன்செஸ்டர், கிளாஸ்கோ, எடின்பர்க், பிரிஸ்டர் மற்றும் ஷெஃபீல்ட் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் நடைபெற்று வரும் போருக்கு எதிராகவும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் இதனை ஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்ட பலர் பிரித்தானியாவில் யூத சமூகங்கள் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது சமூகத்தின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது. அத்துடன் அவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்பதில்லை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யூத சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்பவர்களுக்கு எதிராக இங்கிலாந்து எப்போதும் நடவடிக்கை எடுக்கும் எனவும் இவ்வாறான செயற்பாடுகள் பிரித்தானிய சடத்திற்கு முரணானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மன்செஸ்டரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியின் பாதுகாப்பிற்காக அதிக நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் எனவும், இது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

சீனா விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

உக்ரைன் சுதந்திர தினத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 22 பேர் பலி

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி – 14 பேர் மாயம்

editor