உள்நாடு

பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல்

(UTV|கொழும்பு)- அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று(28) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இன்று (28) முற்பகல் 10.45 மணி முதல் 11.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் வைக்கப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூதூரில் பஸ் விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்.

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை

editor

பிரதமர் இத்தாலி விஜயம்