அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தல் – நிதியை விடுவிக்கும் உரிமத்தில் கையொப்பமிட்ட ஜனாதிபதி அநுர

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான செலவுத்தொகை என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து நேற்று (28) இரு வேறு கலந்துரையாடல்கள் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றிய பொலிஸார்

editor

இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

நோர்டன் பிரிட்ஜ் மண்சரிவில் ஒருவர் பலி