உள்நாடு

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை அமர்வுகளை நடாத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

அத்துடன் கொரோனா தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் சபை அமர்வுகளை நடாத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காட்டு யானைகளுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு தேவையாம்!

editor

துமிந்தவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா!

editor