உள்நாடு

பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் இன்று(15) ஆரம்பமாகின.

மேல் மாகாண பாடசாலைகளில் 05, 11, 13 ஆம் தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவிருக்கின்றன. கொவிட் தொற்றுக் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வகுப்புக்களில் உள்ள சகல மாணவர்களை அழைப்பதா அல்லது பகுதியளவான மாணவர்களை அழைப்பதா என்பது பற்றி பாடசாலைகளில் நிலவும் இடவசதிகளைக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

எலி காய்ச்சல் நோய் என சந்தேகம் – 23 வயது இளைஞன் உயிரிழப்பு

editor

மகன் தாக்கியதில் தாய் மரணம் – வாழைச்சேனையில் சம்பவம்

editor

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியானது

editor