சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வு

UTV | COLOMBO – பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கோவை தொகுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளைக் கண்டறிந்தால் உடனடியாக பெற்றோருக்கு அறிவிப்பது கட்டாயமாகும். காய்ச்சல் நீடிக்குமானால், பரசிற்றமோல் மாத்திரைகளை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்புளுவென்சா நோய் பற்றி ஆலோசனை வழங்குவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் இலக்கம் 0710-107-107 என்பதாகும்.

Related posts

அளுத்கம – தர்கா நகரை சுற்றி விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

அபூர்வமான வெள்ளை நிற டொல்பினை பார்த்துள்ளீர்களா?..படுவைரலாகி வரும் வீடியோ