உள்நாடு

பாடசாலை நேரத்தை நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர், அதிபர்கள் கடும் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்கள், நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

Related posts

ஜனாதிபதி அநுரவின் அடுத்த வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல்

editor

IMF அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் வெள்ளியன்று

அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணிலின் வேலைத்திட்டங்களே உள்ளடக்கம் – அகிலவிராஜ்

editor