உலகம்

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொவிட் 19) – பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபை  சபாநாயகர் ஆசாத் குவாசிருக்கு (Asad Qaiser ) கொரோனா நோய் உறுதியாகியிருப்பதால், நோய் பரவலை தடுக்க தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் ஆசாத் குவாசிர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

இதில் அவருக்கு கொரோனா நோய் உறுதியாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆசாத் குவாசிர் தம்மை தாமே வீட்டில் சுயதனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்.

இதேபோல் ஆசாத் குவாசிரின் மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர்களும் தங்களை தாங்களே தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர்.

Related posts

காசாவில் தொடரும் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களில் மேலும் 42 பலஸ்தீனர்கள் பலி

editor

மீண்டும் இணையும் காதல் தம்பதி

நிலக்கரிச் சுரங்க வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் பலி