உள்நாடுபிராந்தியம்

பஸ்ஸின் பின்புறத்தில் மோதிய டிப்பர் – 07 பேர் வைத்தியசாலையில்

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று மோதி இன்று (24) விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் உட்பட 07 பேர் காயமடைந்து தனமல்வில பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக டிப்பர் லொறியின் சாரதி தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன் – வவுனியாவில் கொடூர சம்பவம்

editor

அரசு மருத்துவமனைகளில் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் வாய்ப்பு

வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

editor