உள்நாடுபிராந்தியம்

பஸ்சுக்குள் கத்திக்குத்து – மனைவி படுகாயம் – கணவன் கைது

பதுளையில் பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுக்குள் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய மனைவியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மனைவி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

துசித ஹல்லொலுவ வின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் – சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு

editor

சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு | வீடியோ

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக முடங்கியது போக்குவரத்து