உள்நாடு

பஸ் – கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 5 பேர் காயம்!

அநுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் மற்றும் கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது கெப் வாகனத்தின் சாரதியும் பஸ்ஸில் பயணித்த நால்வரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் ஆசிரியை ஒருவரும் காயப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம் – சஜித்

editor

முன்னாள் ஜனாதிபதி ரணில் – இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

editor

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று