அரசியல்உள்நாடு

பள்ளிவாசலில் சத்தியப் பிரமாணம் செய்த இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்!

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச  சபைக்கான சுயேட்சைக்குழு பிரதிநிதியாக போட்டியிட்டு தெரிவான கே.எல்.சமீம் (எல்.எல்.பி) இறக்காமம் பெரிய ஜும் ஆப் பள்ளிவாசலில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி கடந்த சனிக்கிழமை  (31) வெளியாகியானது.

இதற்கமைய இறக்காமம் பிரதேச சபை உறுப்பினராக அஸர் தொழுகையின் பின்னர் இறக்காமம் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சமாதான நீதவான் பிறை எப். எம் அறிவிப்பாளர் அஸ்வர் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பிரதம இமாம்  றசீட் மெளலவி துஆ பிரார்த்தனை செய்தார்.

இறக்காமம் வரலாற்றில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பள்ளிவாயலில் சத்தியப் பிரமாணம் செய்தமை இதுவே  முதற் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

Related posts

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டுவதை உடனடியாக நிறுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor

தபால் மூல வாக்களிப்பு; விண்ணப்பங்கள் நாளை முதல்

ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை விசேட உரை

editor