உள்நாடு

பல பகுதிகளில் நாளை 16 மணி நேரம் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – நாளை (21) பல பிரதேசங்களுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கஹஹேன, ஹங்வெல்ல, ஜல்தர-ரணால, கடுவெல, மாப்பிட்டிகம மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிலத்தடி நீர்த் தாங்கி சுத்தப்படுத்தப்படுவதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் – புதிய வர்த்தமானி வெளியானது

editor

நம்பர் முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை