உள்நாடு

பல பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு நாளை பூட்டு

(UTV | நுவரெலியா) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை மூடப்படும்.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிடீமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏனைய மதுபானசாலைகளும் நாளை மூடப்படும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

அந்தந்த பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

Related posts

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்

புகையிரத பாதையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

ஆளுநர் முசம்மிலின் மகன் இஷாம் ஜமால்தீனை தேடும் பொலிஸ்!