உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

டி-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் மீது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

 don பிரசாத்தை கலாய்த்து தள்ளிய பெண் (வீடியோ)

”எங்களை கைது செய்ய எத்தனிப்பது நடக்காது” அரசியல்வாதியை எச்சரித்த சபீஸ்

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

editor