சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூரைத்தகடுகள் விநியோகித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை தொடக்கம் தினசரி விசாரணைக்கு

உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர 4 500 பேர் விண்ணப்பம்

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு