உள்நாடு

நோர்டன் பிரிட்ஜ் மண்சரிவில் ஒருவர் பலி

(UTV | நாவலப்பிட்டி) – நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டெப்லோ பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை இந்த மண்சரிவு பதிவாகியுள்ளதுடன், அது தொடர்பான மண்மேடு இரண்டு வீடுகள் மீது சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவரின் உடல் வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் 39 வயதான டெப்லோ தெருவில் வசிப்பவர்.

சடலம் நாவலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவினால் 08 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் நோர்டன் பிரிட்ஜ் தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களுக்கான நலன்புரி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related posts

சடலங்கள் அடக்கம் : சிக்கல் இல்லை

பௌத்த தர்மத்தின் பாதையில் சென்று மீண்டும் தன்னிறைவு பெற்ற நாடாக முன்னேறுவோம் – பொசொன் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த விட்ட தவறுகளை இந்த அரசாங்கம் செய்யக் கூடாது – நாமல் எம்.பி

editor