உள்நாடு

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் விபரம்

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்று (07) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பதிவானோரில் 16 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், ஒருவர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்றைய இருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Update – உழவு இயந்திர விபத்து – இதுவரை 08 சடலங்கள் மீட்பு

editor

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!