உள்நாடு

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

(UTV | கேகாலை) – நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

கொழும்பு – கண்டி வீதியின் கேகாலை மொலகொட பிரதேசத்தில் 02 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரண்டு வேன்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

கொழும்பில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.​

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தரம் ஒன்று பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கையில் திருத்தம்

எட்டு உயிர்களை காவுவாங்கிய பாதை – அரச அதிகாரிகள் இன்னும் கண்டுக்கொள்ளவில்லை – பாராளுமன்றத்தில் அஷ்ரப் தாஹிர்

editor

தேர்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும்- மஹிந்த தேசப்பிரிய