வணிகம்

நுவரெலியாவில் மரக்கறித் தட்டுப்பாடு

(UTV|NUWARAELIYA)- அண்மையில் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால் நுவரெலியாவில் விவசாயச் செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் மரக்கறிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் படி,1 கிலோகிராம் கோவா 115 தொடக்கம் 120 ரூபா, உருளைக்கிழங்கு 140 தொடக்கம் 145 ரூபா, பீற்றூட் 170 தொடக்கம் 180 ரூபா, சலாது 320 ரூபா, கரட், லீக்ஸ் ஆகியன 330 ரூபா, முள்ளங்கி 70 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

வாகன இறக்குமதியில் வீழ்ச்சி

இலங்கையின் நிர்மாணத்துறையின் ஊக்கத்துக்காய் இணையத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது வெபினார் நிகழ்வை INSEE i2i நிலையம் வெற்றிகரமாக ஏற்பாடு