சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவு…

(UTV|COLOMBO) கடந்த சில மாதங்களாக மலையகத்தில் கடும் வரட்சி நிலவி வருவதால் மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டமானது 66 அடியாகவும் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 48 அடியாகவும் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 34 அடியாகவும் குறைவடைந்துள்ளதனால், மின் உற்பத்திசெய்யும் அளவு குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

கடும் வரட்சி காரணமாக மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதுடன் வரட்சியான காலநிலை தொடரும் நிலமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பில் புதிய நடைமுறை – ஜனாதிபதி

அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்க உதவிச் செயலாளர்