உள்நாடு

நீர் கட்டணம் செலுத்தாதோர் விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 7,200 மில்லியன் ரூபாவை நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறியுள்ளதாகவும், ஆறு மாதங்கள் அல்லது 2000 ரூபாய்க்கு மேல் நிலுவையாகவுள்ள நீர் பட்டியலுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

27 இலட்சத்தி 50,000 பேருக்கு மாதந்தம் 50 மில்லியன் கனமீட்டர் குடிநீரை வழங்குகிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,100 மில்லியன் ரூபாயாக இருந்த நிலுவைக் கட்டண தொகையை செலுத்தாமையினால், டிசம்பர் மாதமளவில் அத்தொகை 7,200 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மாதாந்த குடிநீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாத பில்லில் 1.5 சதவீத தள்ளுபடியும்இ பணம் செலுத்த தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த பில்லில் 2.5 சதவீதம் தாமதக் கட்டணமும் அறவிடப்படும் என்று உதவி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது – அனைத்து பாடசாலைகளுக்குமான சுற்றறிக்கை வௌியானது

editor

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்