அரசியல்உள்நாடு

நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரிக்கு எதிராக மனு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ​​பிரதிவாதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தனது கட்சிக்காரருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக சேவையாற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததை அடுத்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி அவர் தொடர்ந்தும் தலைவராக செயற்படவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றினை அவமதிப்பு செய்யவில்லை எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

Related posts

நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் – முன்னிலை சோஷலிசக் கட்சி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor

திடீரென உயர்ந்த நீர்மட்டம் – 35 பேரை மீட்ட இராணுவம் – பாரிய உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது

editor

நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி – ரஞ்சன் ராமநாயக்க

editor