உள்நாடு

நிறைவுகாண் மருத்துவவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

(UTV | கொழும்பு) – நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத் துறைசார் 14 தொழிற்சங்கங்கள் நேற்று (05) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

சுகாதாரத்துறையில் தங்களைப் புறக்கணித்து அரசாங்கம் செயற்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியுடன் நேற்று (05) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்றும் இந்த போராட்டம் தொடரவுள்ளது.

இந்த விடயம் இலங்கையின் சுகாதார நிலைமையையும், கொவிட் பரவல் நிலைமையையும் மேலும் அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Related posts

கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

A/L எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினரின் கோரிக்கை

சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் மக்களுக்கான அறிவிப்பு