உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மரம் விழுந்ததில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது மரம் விழுந்ததால், மரம் வெட்டப்படும் வரை நேற்று (30) மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது.

மரம் சரிந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லை என்றும், மரம் முறிந்து விழுந்ததால் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

-கிரிஷாந்தன்

Related posts

முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண்கலங்கிய மாவை சேனாதிராஜா – அனுதாப அறிக்கையில் ரிஷாட் பதியுதீன் எம்.பி

editor

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து அரிசி வகைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை

editor

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம்