வகைப்படுத்தப்படாத

நாவலப்பிட்டியில் மரவள்ளி கிழங்கு (மரம்) தோட்டத்தில் இருந்த 109அடி நீளம் மலைப்பாம்பு

(UTV|KANDY)-நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெளிகம்பொல கிராமத்தில்  பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர்.

மரக்கரி தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு மரத்திற்கு நீர் பய்ச்சுவதற்கு 23.11.2017 காலை 10 மணியளவில்  சென்ற போதே  மரத்தடியில்  மலைப்பாம்பை கண்டுள்ளார்
மலைபாம்பை கண்ட பிரதேச வாசிகள் அச்சம் கொண்டதுடன் பாம்பையும் மடக்கி பிடித்துள்ளனர்
அன்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் காணமல் போன நிலையிலே இந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்
பிடிக்கப்பட்ட மலைபாம்பை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

கனரக வாகனம் பாதையில் தாழிறங்கியது .. தலவாக்கலை டயகம வீதி போக்குவத்து தடை மாற்றுவழியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் – [photos]

அல்ஜீரிய ஜனாதிபதி இராஜினாமா…

Five Indian fishermen, 34 vessels in Sri Lanka’s custody – Indian Govt.