உள்நாடு

நாளைய மின்வெட்டினை 5 மணி நேரமாக குறைக்க ஆலோசனை

(UTV | கொழும்பு) – நாளை (04) மின்சார சபையினால் விடுக்கப்பட்ட 7 மணி நேர மின்வெட்டு கோரிக்கைக்கு அனுமதி மறுத்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை மேற்கொள்ளவுள்ள மின்வெட்டை 5 மணி நேரத்திற்கு குறைக்க ஆலோசனை தெரிவித்துள்ளதாக, ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பகல் நேரத்தில் 3 அல்லது 4 மணி நேரமும் இரவு 10.00 மணிக்கு முன் 1 அல்லது 2 மணி நேரமும் மின்வெட்டை மேற்கொள்வதற்கு ஆலோசனையும் வழங்கி உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பம்

அரசாங்க அச்சகத்துக்கு இதுவரை கிடைக்கப்பெறாத உள்ளூராட்சி தேர்தல் வர்த்தமானி!