அரசியல்உள்நாடு

நான் மீண்டும் அரசியலுக்கு வருவது பிரதான கட்சிகளுக்கு பீதி – ரஞ்சன் ராமநாயக்க

பிரதான அரசியல் கட்சிகள் தான் மீண்டும் அரசியலுக்கு வரத் தீர்மானித்ததையடுத்து பீதியடைந்துள்ளதாக நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (26) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கூட்டத்தில், “நான் மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து பிரதான கட்சிகள் அச்சமடைந்துள்ள நிலையில், நான் களத்தில் இறங்கும் முடிவுக்கு எதிராக அக்கட்சிகளால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என்று ராமநாயக்க தெரிவித்தார்.

இதன்போது வகுப்புவாத மற்றும் மத வெறுப்பை நாட்டில் முறியடிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

Related posts

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உர மானியம் வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

கைத்தொலைபேசியை பார்த்து பேரூந்து ஓட்டும் சாரதி!

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் தீ விபத்து