உள்நாடு

நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு உரக்கப்பல்!

(UTV | கொழும்பு) –   நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு உரக்கப்பல்!

நெற்பயிர்ச்செய்கைக்கு தேவையான மியூரியேட் ஒப் பொட்டாஷ் உரம் ஏற்றிய கப்பல் இன்று (03) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

 

✔குறித்த கப்பலானது 41,876 மெற்றிக் தொன் அளவுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் மேற்கொள்ளப்பட்ட நடவடிகைகளின் பின்னர், இன்று உரங்ளை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த MOP உரத் தொகுதியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு டிசம்பர் 05ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்தில் அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெரியவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கொட்டகலையில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பில் தீ விபத்து

editor

லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் பிணை

editor

இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள் – மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம்

editor