சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

(UTVNEWS|COLOMBO) – மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

Related posts

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்

உணவு பொருட்களை பரிசோதிப்பதில் 2000 சுகாதார பரிசோதகர்கள்

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவுவதாக சுவிட்சர்லாந்து உறுதி-சிமோநெட்டா சொமாருகா