உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

Related posts

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம் – மாம்புரியில் சோகம்

editor

பாடசாலைகள் திறப்பு தொடர்பாக கல்வி அமைச்சர் கருத்து

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை