அரசியல்உள்நாடு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் கடற்படையின் உயர் அதிகாரிகளுடன், சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ,கடல் பரப்பில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள், கடல் மார்க்கமாக நடைபெறும் ஆயுத விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனை, சுற்றிவளைப்பு உள்ளிட்ட ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு முன்னெடுப்புக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் கஞ்சன பானகொட உள்ளிட்ட கடற்படையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

editor

77 வது தேசிய சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானம்

editor