சூடான செய்திகள் 1

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் ஐ.நா. கவலை

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் கவலை வௌியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் தொடராமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம், அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரிடம் அறிக்கையின் ஊடாகக் கோரியுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் இடம்பெறும் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்படும் கண்டனங்களை வரவேற்பதாகவும் குறித்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அவசரகால சட்டம் அமுலிலுள்ளபோது அனைத்து சமூகங்களினதும் உரிமைகளுக்கு மதிப்பளித்து சமூகங்களினதும் தனியாரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம், பாதுகாப்புப் பிரிவினரிடம் குறித்த அறிக்கையினூடாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மீண்டும் 03ம் திகதி ஆரம்பம்

நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகள் சடலமாக மீட்டு