உள்நாடு

நாடுமுழுவதும் ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி

நாடுமுழுவதும் நேரடியாக ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) நிர்வாக சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்துள்ளார்.

GovPay மற்றும் வரவிருக்கும் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

இது குறித்து ஹர்ஷ புரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சில வாரங்களுக்கு முன்பு, எங்களுக்கு நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்தது.

எனவே, இந்த மாதம் முதல் நாடு முழுவதும் அபராதங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் முறையை செயல்படுத்தத் தொடங்குவோம்.

இந்த மாத இறுதிக்குள் மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களை இணைப்பதன் மூலம் முதல் கட்டத்தில் இதை அறிமுகப்படுத்த நாங்கள் நம்புகிறோம்.

பின்னர், மிக விரைவான திட்டத்தின் கீழ், செப்டெம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் நேரடியாக ஒன்லைன் மூலமாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்படும்.

நாங்கள் govpay ஐ அறிமுகப்படுத்தியபோது, பல பயன்பாடுகள் தயாராக இல்லை. இப்போது, பயன்பாடுகள் தயாராக உள்ளன. பின்னணி பயன்பாடுகள் தயாராக உள்ளன, எனவே நீங்கள் விரும்பும் ஒரு செயலியைப் பயன்படுத்தி, உங்கள் விருப்பப்படி ஒரு வங்கியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தலாம். என்றார்.

Related posts

அம்பாறை பதியதலாவயில் காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை!

editor

77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர ஆற்றிய முழுமையான உரை தமிழில்

editor

ஆட்கடத்தல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்கிறார் – பாதுகாப்புச் செயலாளர்!