உள்நாடு

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை (17) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 ஜனாதிபதி செயலணி நாளை கூடவிருக்கிறது. அக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.

செயலணியின் கடந்த கூட்டத்தின் போது, நாட்டைத் திறப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் நினைவூட்டினார்.

Related posts

77ஆவது சுதந்திர தினத்தில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம் – புதிய அரசின் செயலுக்கு பலரும் பாராட்டு

editor

நாட்டின் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு