உள்நாடு

நாடளாவிய ரீதியில் சுமார் 10,000 ஹோட்டல்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இது தவிர, கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் கேன்டீன்களில் கிட்டத்தட்ட பாதி மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் அரசு நிறுவனங்களில் 3,000 கேன்டீன்களும், பாடசாலைகளில் 4,600 கேன்டீன்களும் இயங்கி வருகின்றன.

மேலும், கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நிகழ்வுகளுக்கான (திருமண வீடுகள், மரண வீடுகள் மற்றும் மரண வீடுகள்) உணவு மற்றும் பான விநியோக சேவைகள் (கேட்டரிங்) கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அசேல சம்பத் தெரிவித்தார்.

Related posts

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற புதிய இணையவழி முறைமை – நிலுஷா பாலசூரிய

editor

சென்னையிலிருந்து 320 பேர் நாடு திரும்பினர்

வெள்ளியன்றுக்கான தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்து கொள்வது தொடர்பில் தீர்மானமில்லை