உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்றும் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்றும்(27) மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A முதல் W வரையான வலையங்களில் பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு நகர் உள்ளிட்ட வணிக வலையங்களில் காலை 06 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதனிடையே, M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் அதிகாலை 05 மணி முதல் காலை 08 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Related posts

காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

மே மாதம் முதலாம் வாரத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சு