உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சுகயீன விடுமுறையை அறிவிக்கும் வகையில் இன்று (18) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் செயற்குழு உறுப்பினர் சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சரித ஜயநாத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமனம்

editor

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் – பிரதமர்

பாராளுமன்ற தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான விசேட செய்தி

editor