உள்நாடு

நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்கள் நாளை(16) முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தொிவித்தார்.

இதன்போது, அவர் மேலும் கூறுகையில், பிரதேச செயலகங்களில் இதற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு, மொத்த விற்பனை நோக்கில் பொருட்களை கொள்வனவு செய்யவதற்காக மாத்திரம் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு வரமுடியும் என தெரிவித்தார்.

Related posts

இன்று 437 கொரோனா தொற்றாளர்கள்

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

நாளை ரயில்வே வேலைநிறுத்தம்!

editor