தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (19) மாலை 4:00 மணி முதல் நாளை (20) மாலை 4:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முதல் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம்: – ஹல்துமுல்ல – பசறை
காலி மாவட்டம்: – நாகொட – எல்பிட்டிய – நெலுவ
கண்டி மாவட்டம்: – உடுநுவர – உடுதும்பர
கேகாலை மாவட்டம்:- மாவனெல்லை – ருவன்வெல்ல – அரநாயக்க – ரம்புக்கன – கேகாலை – புலத்கொஹுபிட்டிய – யட்டியந்தோட்டை – கலிகமுவ
மாத்தளை மாவட்டம்: – ரத்தோட்ட – யடவத்தை – உக்குவெல – பல்லேபொல – அம்பன்கங்க கோரல – லக்கல – நாவுல
நுவரெலியா மாவட்டம்: – அம்பகமுவ – ஹங்குரன்கெத்த – வலப்பனை
இரத்தினபுரி மாவட்டம்: – கலவானை – இம்புல்பே – எஹெலியகொடை – இரத்தினபுரி