உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) –  19 ஆவது அரசிலயமைப்பு திருத்தத்தின் பிரகாரம் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேஷப்பிரிய செயற்பட்டதுடன் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 5 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியினால் பெயரிடப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படவுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம்!

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலத்தில் 200 மில்லியன் ரூபா வருமானம்

editor

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

editor