அரசியல்உள்நாடு

தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று செயற்பட வேண்டும் – ரிஷாட் எம்.பி

மக்களின் எதிர்பார்ப்பான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை நிலாவெளி பகுதியில் இன்று (17) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று செயற்பட வேண்டும் அநியாயமாக கைதான வர்களை விடுவிக்கப்பட்டு சரியான விமோசனம் கிடைக்க வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம்.

குச்சவெளி பிரதேசத்தில் ஒன்று பட்டு ஒற்றுமையாக வாக்களித்தால் மக்கள் காங்கிரஸின் ஊடாக அதிகளவான ஆதரவை பெற்றுக் கொள்ளும் என நம்புகிறோம்.

தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமை ஊடாக பிரதேச சபை ஆட்சியை அமைக்கலாம் என்றார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் : நிமால் லன்சா

‘போராட்டக்காரர்களின் தூரநோக்கின்மையால் போராட்டம் வழிதவறியது’

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வரவு செலவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

editor